26 Apr 2013

இஞ்சித்தின்ன கொரங்கும் இன்ஜினியரிங்கும்!

கடுப்பைக் கிளப்பும் அசைன்மேன்ட்டுகளை பட்டும்படாமலும் தொட்டும்தொடாமலும் எழுதிவிட்டு நள்ளிரவு வரை இணையத்தில் இன்ச் பை இன்சாக நகர்ந்தவாரே லேப்டாபை கட்டிப்பிடித்து தூங்கிப் போக 9 மணி கல்லூரிக்கு என் அறையில் 8.50க்கு சூரியோதயமாகும்..!.?.

அதன் பிறகு இணையக் கடன்களை எல்லாம் முடித்து ( தவறாமல் பேஸ்புக் லாகின் ). குளிக்கச் சென்றால் பச்சைத்தண்ணி என்னைப் பார்த்து பல்லைக் காட்ட.. நான் பக்கெட்டைப் பார்க்க பக்கெட் என்னைப் பார்க்க.. இந்த காதல் கதை ஐந்து நிமிடம் கழித்து ஒரு வாக்கியத்துடன் முடிவுக்கு வரும் 'வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து காட்டுவோம்'. ஒருவழியாக நனைந்து ரூமுக்கு வந்தால் கல்லூரியில் மணியடிப்பது எனக்குக் கேட்க்கும் மணி 9.

24 Apr 2013

சரச சிலைகள்

ஊரைச் சுத்தி ஆயிரத்தி முன்னூறு குறைகளிருக்கு அத விட்டுட்டு உப்பு சப்பில்லாம முச்சந்தியில வந்து கலாச்சார சீரழிவுக்கு கோவில் சிற்பங்களில் உள்ள சரசர சிற்பங்களும் ஒரு காரணம்னு சொல்றது படு கண்மூடித்தனம்! மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறேன் பேர்வழின்னு, இஸ்லாம் சிறந்ததுன்னு சொல்ல ஹிந்துசத்தை உதாரணத்து எடுக்கும் எடுப்பு சோறுகளும் செய்யும் செம காமடி விஷயங்கள் இவை :) எனக்கும் மூடநம்பிக்கைகளில் துளியும் உடன்பாடில்லை கோவில்களின் வழிபாட்டு முறைகளை செருப்பால அடிக்கும் நான் கோவில்களை போற்றுகிறேன்!!

21 Apr 2013

ஐபிஎல்'ஜீ.. அச்சாஜீ..

இந்தியா ஏழைகள் நிறைந்த நாடு, பல உள்நாட்டு கலகங்களையும், சுதந்திரமடைந்து பல ஆண்டுகளைக் கடந்து இன்னும் சிலபல பிரிவினைவாத குரல்களைக் கொண்ட நாடு போன்ற இன்னும் பல விஷயங்களை உடைத்து தவிடுபொடியாக்கி ஒரு கலர்புல்லான மாயையை ஏற்படுத்துது இந்த ஐபிஎல் என்றால் அது மிகையல்ல!! இந்தியாவின் பொருளாதாரம், உள்நாட்டு விவகாரங்கள், தன்னிறைவுகள், நிர்வாகங்கள், நிதி ஒதுக்கீடு, கார்பரேட் அதிகாரங்கள் ஆளுமைகள் போன்ற இன்னும் பல விஷயங்களை எழுதும் வெளிநாட்டு கட்டுரையாளர்கள் இந்தியாவில் ஐபிஎல் சமாச்சாரத்தை ஒரு கேலியான நகைப்புக்குரிய வரியாகவே, எதார்த்தமாகவோ சொன்னால் கட்டுரை இன்னும் சிறப்பாகும் உதாரணத்திற்கு

11 Apr 2013

ஆண்மை அடங்க..

தேன்மொழியாளே தேடிய தமிழே,
தேடிய தமிழும் பாடிய வரியே,
பாடிய வரியில் கூடிய சுவையே,
கூடிய சுவையை சூடிய மனமே,
சூடிய மனதின் சுந்தர ரதியே!
...
சுந்தர ரதியின் சூத்திரம் விழியே,
சூத்திர விழியின் சூனிய வலியே,
சூனிய வலியில் சுருங்கிய மனமே,
சுருங்கிய மனதின் சூட்சுமம் தனியே,
சூட்சுமம் தனிலே தனி நிலவவளே.!.
UA-42819084-1